வாசிப்பு

சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்வலர்கள் ஆகியோருடன் கவிமாலை அமைப்பு ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று மாதாந்திரச் சந்திப்பை நடத்திவருகிறது.  
மர்மம், கற்பனை கலந்த உலகங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லும் வல்லமை உடையவை, புதிதாக வெளிவந்துள்ள சிங்கப்பூர் தமிழ்ச் சிறுவர் நாவல்கள். உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ‘காணாமல் போன கிழங்கு பாட்டி’, ‘டிராகனைத் தேடி,’ ‘அகிவா’ ஆகிய மூன்று தமிழ் நாவல்களையும் தேசிய கலைகள் மன்றமும் சிங்கப்பூர் புத்தக மன்றமும் கடந்தாண்டு இணைந்து வெளியிட்டன. எட்டு முதல் பன்னிரண்டு வயது வரையிலான மாணவ வாசகர்களை இம்முயற்சி மையப்படுத்தியது.
சமூக ஊடகத்தில் வலம்வரும் குறுகிய உள்ளடக்கங்கள் நீர் தளும்பும் குறைகுடம்போல. அதனால் ஏற்படும் கவனச்சிதறல், தொடர்ந்து நிலவும் சமூக ஒப்பீடுகள், மன அழுத்தம் போன்ற பின்விளைவுகள் பல. அதில் அதிக நேரம் செலவிடுவதால் பலர் இன்று அறிவாற்றல் சுமைக்கு ஆளாகின்றனர்.
சிங்கப்பூரில் 1945 ஆம் ஆண்டு முதல் அண்மைய காலகட்டத்தில் எழுதப்பட்ட நவீன இலக்கியங்கள் வரை, பல எழுத்தாளர்கள் படைத்த கதாபாத்திரங்களின் மாறுபடும் குணாதிசயங்களையும் சூழ்நிலைகளையும் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நவம்பர் 25ஆம் நாள் ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸில்’ நடைபெற்றது.
டிக்டாக் ஊடகம், ‘பாப்புலர்’ கடையுடன் இணைந்து படைப்பாளிகள், ஆசிரியர்கள், வாசிப்பாளர்களை ஒன்றிணைக்கும் ‘புக்டாக்’ எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.